Posts

'எவ்வளவுக்கெவ்வளவு உங்கள் வேர்களுடன் இணைந்திருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உலகளாவிய அளவில் நீங்கள் உயர்கிறீர்கள்': தமிழ் ஹிப்-ஹாப்பை உலக அரங்கிற்குக் கொண்டு செல்வது குறித்து ஹிப்-ஹாப் தமிழா ஆதி.

Image
 'எவ்வளவுக்கெவ்வளவு உங்கள் வேர்களுடன் இணைந்திருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உலகளாவிய அளவில் நீங்கள் உயர்கிறீர்கள்': தமிழ் ஹிப்-ஹாப்பை உலக அரங்கிற்குக் கொண்டு செல்வது குறித்து ஹிப்-ஹாப் தமிழா ஆதி. CHENNAI -ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, 'ஹிப்ஹாப் தமிழா' (HipHop Tamizha) என்பது வெறும் இசைக்குழுவாக மட்டுமல்லாமல், அதையும் தாண்டிய ஒரு அடையாளமாகத் திகழ்கிறது. பல இளம் தமிழர்களுக்கு, இது கலாச்சாரப் பெருமிதம், சுய-வெளிப்பாடு மற்றும் ஒருவரின் அடையாளத்தில் உறுதியாக இருப்பது ஒரு தடையாக இல்லாமல் பலமாக அமையக்கூடும் என்ற நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது. iQOO நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிபுன் மார்யாவுடனான 'தி குவெஸ்ட் டாக்' (The Quest Talk) உரையாடலில், தனது ஆர்வத்தின் அடிப்படையில் தொடங்கிய ஒரு முயற்சியை, தமிழ்நாட்டின் மிகச் செல்வாக்கு மிக்க கலாச்சார இயக்கங்களில் ஒன்றாக மாற்றிய பயணத்தைப் பற்றி ஆதி (Adhi) பகிர்ந்துகொண்டார். தனது ஆரம்பகால நாட்களை நினைவுகூர்ந்த ஆதி, ஆரம்பத்தில் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்திருந்ததாகக் கூறினார். "கல்லூரியில் இருந்தபோ...

இந்தியா-ஆசியான் Association of South East Asian Nations(ASEAN)வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக திரு. சி.எம். விஷ்ணு பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்

Image
 இந்தியா-ஆசியான் Association of South East Asian Nations(ASEAN)வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக திரு. சி.எம். விஷ்ணு பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்.  டெல்லி நடைபெற்ற சிறப்புமிக்க விழாவில், திரு. சி.எம். விஷ்ணு பிரபு, இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் (India ASEAN Trade Council) வர்த்தகத் தூதராக (Trade Ambassador) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம், இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பு நாடுகளான புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தைமூர் - லெஸ்தே ஆகிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக அமைந்துள்ளது.  இந்த நியமன விழாவில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், உயர் ஆணையர்கள், தூதரக அதிகாரிகள், தொழில் முனைவோர், வணிகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு, பிராந்திய பொருளாதார கூட்டாண்மைகள் மற்றும் சர்வதேச வர்த்தக உறவுகளின் வளர்...

ஜோய்ஆலுக்காஸ் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி’

Image
 ஜோய்ஆலுக்காஸ் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி’ தி.நகர், சென்னையில், ஜூன் 5 முதல் 21 வரை. சென்னை, தமிழ்நாடு – ஜூன் 2026: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது சென்னை தி.நகர் ஷோரூமில் ஜூன் 5, 2026 முதல் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சியை’ நடத்துகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தக் கண்காட்சி, வைர நகை வடிவமைப்பில் தலைசிறந்த கைவினைத்திறன், வடிவமைப்பு நேர்த்தி மற்றும் புதுமையை கொண்டாடும் ஒரு நிகழ்வாக அமையும்.  பிரம்மாண்டமான மணப்பெண் நகைத் தொகுப்புகள் முதல் தினசரி அணியும் நவீன வைர நகைகள் வரை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். பாரம்பரியத்துடன், காலத்தால் அழியாத அழகையும் நவீன வடிவமைப்பையும் ஒருங்கிணைக்கும் பல்வேறு சிறப்புமிக்க நகைகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு வடிவமைப்பும் ஒரு கலைப்படைப்பாக திகழ்கிறது, இது கண்காட்சி நடைபெறும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ஜோய்ஆலுக்காஸ் கூறுகையில், 'பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி’ என்பது வைரங்களின் மீதுள்ள கவர்ச்சிக்கும், நகை வடிவமைப்பில் ...

Honda launches the New Honda City and marks India Debut of its Global Sporty Hybrid SUV All New ZR-V e:HEV

Image
 Honda launches the New Honda City and marks India Debut of its Global Sporty Hybrid SUV All New ZR-V e:HEV   Two Sporty Icons bring Premium Performance, Advanced Technology and Electrified Mobility to India   New Delhi, June 3rd 2026: Honda Cars India Ltd. (HCIL), a leading manufacturer of premium cars in India, today announced the launch of New Honda City and the India Premiere of its Global Hybrid SUV the All New ZR-V e:HEV. Celebrating Honda’s legacy of sporty design and engineering excellence, the two models arrive as ‘Two Sporty Icons’ created for customers seeking premium styling, sporty dynamic performance, advanced technology and refined driving experience.   The launch also marks a significant milestone for Honda in India with the introduction of Honda ZR-V – a globally acclaimed premium Hybrid SUV now making its debut in the Indian market.   Two Sporty Icons for a new Era   The new Honda City continues its iconic legacy with enhanced sporty styli...

கலைஞர் டிவியில் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் சமூகப் புரட்சியாளர் ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு!

Image
 கலைஞர் டிவியில் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் சமூகப் புரட்சியாளர் ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு!   வைணவத் துறவியும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதி தொலைக்காட்சித் தொடராக ஆவணப்படுத்தியுள்ளார். கலைஞர் டி.வி.க்காக அவர் எழுதிய இந்தத் தொடர், ராமானுஜரின் ஆன்மிகப் பங்களிப்பைத் தாண்டி, அவர் நிகழ்த்திய சமூகப் புரட்சிகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அரிதினும் அரிதான இந்த மெகாத் தொடர், ஜூன் 3 முதல் திங்கள் - வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிறது.   மதத்தில் புரட்சி செய்த மகான்:   கி.பி. 1017-ல் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர், விசிட்டாத்துவைத தத்துவத்தை உலகிற்கு வழங்கியவர். எனினும், அன்றைய காலகட்டத்திலேயே சாதி, மத பேதங்களை உடைத்தெறிந்து தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். ஒடுக்கப்பட்ட மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றதோடு, சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மொழிக்கும், திவ்ய பிரபந்தத்திற்கும் முன்னு...

கலைஞர் தொலைக்காட்சியில் “இருவர்” - புத்தம் புதிய நிகழ்ச்சி

Image
கலைஞர் தொலைக்காட்சியில் “இருவர்” - புத்தம் புதிய நிகழ்ச்சி     நமது கலைஞர் தொலைக்காட்சியில் “இருவர் - தி லெஜெண்ட்ஸ் ரீ-லோடட்” என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை கொண்டாடும் வகையில் ரஜினி, கமலுடன் இணைந்து பணியாற்றிய கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் அவர்களைப் பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமான பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் கலகலப்பான நிகழ்ச்சியாக “இருவர்” உருவாகி இருக்கிறது.

ராஜா குழுமத்தின் KSR Realty, கோயம்புத்தூரின் ஒத்தக்கால்மண்டபத்தில் “KSR கோவை கார்டன்” பிரீமியம் குடியிருப்பு பிளாட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

Image
 ராஜா குழுமத்தின் KSR Realty, கோயம்புத்தூரின் ஒத்தக்கால்மண்டபத்தில் “KSR கோவை கார்டன்” பிரீமியம் குடியிருப்பு பிளாட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது சென்னை, தமிழ்நாடு – ஜூன் 2026 தென்னிந்தியாவின் முன்னணி மற்றும் நம்பகமான ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான ராஜா குழுமத்தின் KSR Realty, கோயம்புத்தூர் மாவட்டம், மெயிலாளிபாளையம் – ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள தனது புதிய பிரீமியம் குடியிருப்பு பிளாட் திட்டமான “KSR கோவை கார்டன்” திட்டத்தின் பிரம்மாண்ட அறிமுக விழாவை 2026 ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளது. MJF LN & JC திரு. M. கருப்பையா @ ராஜா அவர்களின் தொலைநோக்கு வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்ட KSR Realty, தற்போது அதன் நிர்வாக இயக்குநர் RTN. K. சுரேந்தர் ராஜ் அவர்களின் தலைமையில் தரமான உள்கட்டமைப்பு, வெளிப்படையான சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை மையமாகக் கொண்டு பல வெற்றிகரமான திட்டங்களை வழங்கி வருகிறது. KSR கோவை கார்டன், கோயம்புத்தூரின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய குடியிருப்பு மண்டலங்களில் ஒன்றான ஒத்தக்கால்மண்டபத்தில் அமைந்துள்ளது. இந்த திட்டம் உயர்தர சாலை வ...