விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை கோலாகலமாக்கும் Zee தமிழ் - என்னவெல்லாம் ஸ்பெஷல்?
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை கோலாகலமாக்கும் Zee தமிழ் - என்னவெல்லாம் ஸ்பெஷல்? சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாட ரசிகர்களுக்காக Zee தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பாகும் புத்தம் புதிய திரைப்படங்களுடன் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு விருந்தை வழங்குகிறது. செப்டம்பர் 14 ஆம் தேதி திங்கள்கிழமை, காலை முதல் இரவு வரை விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. காலை 9.30 மணிக்கு பிரபல பேச்சாளரும் எழுத்தாளருமான கலைமாமணி சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. "இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தில் பிரச்சனைகள் பெருகப் பெரிதும் காரணம் பிள்ளைகளா? பெற்றோர்களா?" என்ற சுவாரஸ்யமான தலைப்பில் நடைபெறும் இந்த பட்டிமன்றம், நகைச்சுவையும் சிந்தனையும் கலந்த கருத்துப் பரிமாற்றங்களால் அனைவரையும் கவரவுள்ளது. அதனைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு, சந்தோஷ் ஸ்ரீராம், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன் மற்றும் விடிவி கணேஷ...