ஹோண்டா கார்ஸ் இந்தியா, முதல் மின்சார SUV-க்கான அறிமுகத்திற்கு முன் நாடு முழுவதும் டெஸ்ட் ரன்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா, முதல் மின்சார SUV-க்கான அறிமுகத்திற்கு முன் நாடு முழுவதும் டெஸ்ட் ரன். Chennai, 31 மார்ச் 2026: இந்தியாவில் பிரீமியம் கார்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் . (HCIL), தனது வரவிருக்கும் பேட்டரி எலக்ட்ரிக் வாகனம் (BEV) SUV-க்கான முதல் நாடு முழுவதும் நடைபெறும் சோதனை ஓட்டத்தை இன்று தொடங்கி வைத்தது. இதன் மூலம் இந்தியாவில் பொதுச் சாலைகளில் நடைபெறும் சோதனை செயல்முறையின் அதிகாரப்பூர்வ தொடக்கம் குறிக்கப்படுகிறது. இது ஹோண்டா நிறுவனத்தின் மின்சார இயக்கத் துறையில் மேற்கொள்ளும் பயணத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும், இந்திய வாடிக்கையாளர்களுக்காக முற்றிலும் புதிய மின்சார SUV-ஐ எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான படியாகவும் அமைந்துள்ளது. இந்த மாடலின் புரோட்டோடைப் , உலகளவில் Honda 0 α என்று அறியப்படுபவை, ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025 யில் வெளிப்படுத்தப்பட்டது. இந்த சோதனைத் திட்டத்தின் மூலம், வாகனம் இந்தியாவில் காணப்படும் பல்வேறு ஓட்டுநர் சூழ்நிலைகளில் — நெடுஞ்சாலைகள், நகரச் சாலைகள் மற்றும் சவாலான நிலப்பரப்புகள் உட்பட — வி...