சென்னையில் சதுப்புநில மறுசீரமைப்பை மையமாகக் கொண்ட 'சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம்' (Eco Action & Learning Hub) உருவாக்கத்திற்கு அக்சென்ச்சர் ஆதரவளிக்கிறது.
எப்போது: 24 ஆகஸ்ட் 2026 சென்னையில் சதுப்புநில மறுசீரமைப்பை மையமாகக் கொண்ட 'சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம்' (Eco Action & Learning Hub) உருவாக்கத்திற்கு அக்சென்ச்சர் ஆதரவளிக்கிறது. எங்கே: சென்னை, தமிழ்நாடு பின்னணி: சென்னை மணலியில் உள்ள 15 ஏக்கர் பரப்பளவில், சதுப்புநில மறுசீரமைப்பை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் ‘சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையத்தின்’ (Eco Action & Learning Hub) உருவாக்கத்திற்கு அக்சென்ச்சர் ஆதரவளித்து வருகிறது. இந்த கூட்டுமுயற்சி பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம் 2 (மணலி மண்டலம்) மற்றும் ‘ஃபார்மர்ஸ் ஃபார் ஃபாரஸ்ட்ஸ்’ (Farmers for Forests) என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. இந்த மையம் உள்ளூர் சமூகத்தினர் சுற்றுச்சூழல் நீடிப்புத்தன்மை குறித்து அறிந்துகொள்ளவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் உதவும். இது இந்தியாவில் அக்சென்ச்சர் மற்றும் ஃபார்மர்ஸ் ஃபார் ஃபாரஸ்ட்ஸ் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் மூன்றாவது சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம் ஆகும்; முன்னதாக மஞ்சாரில் (புனே மாவட...