300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய அளவிலான ட்ரோன் விருது பெற்ற சாதனையாளர்
300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய அளவிலான ட்ரோன் விருது பெற்ற சாதனையாளர். தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளைப் பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அறியப்படுபவர் எம். அரவிந்த் குமார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் பணியாற்றி வரும் அவர், ‘ஜனநாயகன்’, ‘பீஸ்ட்’, ‘இந்தியன் 2’, ‘LIK’, ‘வேட்டையன்’, ‘பைசன்’, ‘விடுதலை’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு திரைப்படமான ‘ரணபாலி’ உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் ட்ரோன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ட்ரோன் காட்சிகள் மூலம் தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் கதைக்கேற்ற வான்வழி காட்சிகளை துல்லியமாகப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், திரைப்படங்களுக்கான உயர்தர ட்ரோன் காட்சிப் பதிவுகளையும் (Stock Shots) வழங்கி வருகிறார். இதன் மூலம் திரைப்பட உலகில் “ட்ரோன்மேன்” என்ற பெயரால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், பாகிஸ்தானின் லாகூரில்...