“ஒவ்வொரு மாணவரின் திறமை, ஆர்வம் மற்றும் சிந்தனைகளை ஆசிரியர்கள் வளர்த்தெடுக்க வேண்டும்” ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் நிறுவன வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் வலியுறுத்தல்.
“ஒவ்வொரு மாணவரின் திறமை, ஆர்வம் மற்றும் சிந்தனைகளை ஆசிரியர்கள் வளர்த்தெடுக்க வேண்டும்” ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் நிறுவன வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் வலியுறுத்தல். எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) சார்பில் ஆசிரியர் தினம் 2026 சிறப்பு நிகழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு, இளம் தலைமுறையினரின் அறிவு, திறன் மற்றும் ஆளுமையை வடிவமைத்து, எதிர்கால தலைமுறையினரை உருவாக்குவதில் ஆசிரியர்கள் ஆற்றிவரும் அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் வகையில் நடைபெற்றது. மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப ஆசிரியர்களின் பங்கு தொடர்ந்து பரிணமித்து வருவதையும், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், வேகமாக மாறிவரும் உலகை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்துவதில் கல்வியின் பங்களிப்பையும் இந்நிகழ்வு எடுத்துரைத்தது. நிகழ்வில் உரையாற்றிய எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாண்புமிகு *நிறுவன வேந்தர்* *டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் அவர்கள் கூறியதாவது* : “ஆசிரியர் தினம் என...