சென்னை சைக்ளோத்தான் 2025: களைகட்டிய சைக்கிள் போட்டி!

 

சென்னை சைக்ளோத்தான் 2025: களைகட்டிய சைக்கிள் போட்டி!


https://youtu.be/lCmq1cl8zRs?si=fq0eC-x6qEIYX825




சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் இருந்து மாமல்லபுரம் வரையில் இன்று சைக்கிள் போட்டி நடத்தப்பட்டதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை: 'சைக்ளோத்தான் 2025' போட்டிகள் இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் 800க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணையம் மற்றும் எச்.சி.எல் சார்பில் சாலை பாதுகாப்பு பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் 'சென்னை சைக்ளோத்தான் 2025’ நிகழ்ச்சி நடைபெற்றது. இப்போட்டியில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் இருந்து மாமல்லபுரம் வரை ஆண், பெண் என இரண்டு பிரிவுகளின் கீழ் இந்த சைக்கிள் போட்டியானது நடத்தப்பட்டது. முதல் பரிசு பெற்றவருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக ஒரு லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.80,000 வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் 800க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியின் காரணமாக போக்குவரத்து மாற்றப்பட்டு, ஈசிஆர் அக்கரை சிக்னல் இருந்து கோவளம், மகாபலிபுரம் செல்லும் வாகனங்கள் ஈசிஆர் அக்கரை சிக்னலில் நிறுத்தப்பட்டு ஓஎம்ஆர் சாலையை நோக்கி கேளம்பாக்கம் சென்று கோவளம் வழியாக மகாபலிபுரம் செல்ல அனுமதிக்கப்பட்டன.

அதேபோல், மகாபலிபுரத்திலிருந்து சென்னையை நோக்கி செல்லும் வாகனங்கள் பூஞ்சேரி சந்திப்பில் ஓஎம்ஆர் வழியாக திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர், சோழிங்கநல்லூர் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த போட்டி குறித்து பேசிய சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கூறுகையில், “மக்களுக்கு விளையாட்டு மீது ஆர்வம் வர வேண்டும். ஓடி ஆடி விளையாடுவதன் மூலம் மக்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சைக்கிளத்தான் போட்டியை தமிழக அரசோடு இணைந்து ஏற்பாடு செய்துள்ளோம். இது போன்ற போட்டிகள் மூலம் மக்கள் மன அழுத்ததை போக்கி, ஆரோக்கியமாக வாழ முடியும். மேலும் இசிஆர் ரைடர்ஸ் என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்து, தினந்தோறும் சைக்கிள் ஓட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இந்த போட்டி தற்போது நடத்தப்பட்டது.


இவ்வாறு சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளதால், என்னால் இன்று 40 கிலோ மீட்டர் வேகத்தில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்ல முடிந்தது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அனைவரும் சைக்கிள் ஓட்ட வேண்டும். சைக்கிள் ஓட்டுவது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். சைக்கிள் ஓட்டுவது மூலம் அனைவரும் தங்களது ஆரோக்கியத்தை சுய பரிசோதனை செய்ய முடியும்” என்றார்.



Comments

Popular posts from this blog

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!

Chennai leads the way for PB Partners, with 62% YoY growth driven by a powerful 12,000+ agent network across Tamil Nadu