KALAIGNAR TV – GOWRI SERIAL எகிரும் எதிர்பார்ப்பு - கௌரி தொடரில் இணையும் ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா..!
KALAIGNAR TV – GOWRI SERIAL
எகிரும் எதிர்பார்ப்பு - கௌரி தொடரில் இணையும் ரோஜா சீரியல் புகழ் பிரியங்கா..!
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, துர்கா, கனகா ஆகிய இருவரும் ஒரே முகத் தோற்றத்தில் இருப்பதால் உண்மையான துர்கா யார் என்கிற குழப்பம் நிலவி வருகிறது.
இதனை நிரூபிக்கும் பொருட்டு தீக்குழியில் இறங்க துர்கா முடிவு செய்ய அடுத்த நடக்கப்போவது என்ன என்கிற பரபரப்போடும், ரோஜா மெகாத்தொடரின் நாயகியான பிரியங்கா கௌரி மெகாத்தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாக இருக்கிறார் என்பதால் தொடர் தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.



Comments
Post a Comment