வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் பதிவு காலத்தை ஐந்து வணிக நாட்களாகக் குறைக்கின்ற வகையில் Citi நிறுவனம் eFPI @ Citi-ஐ அறிமுகப்படுத்துகிறது

 வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் பதிவு காலத்தை ஐந்து வணிக நாட்களாகக் குறைக்கின்ற வகையில் Citi நிறுவனம் eFPI @ Citi-ஐ அறிமுகப்படுத்துகிறது


சந்தைக்கு முதன்முதலில் வரும் இந்த தீர்வு இந்தியாவின் குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்டில் அறிவிக்கப்பட்டது



சென்னை – வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கான (FPIs) பதிவு செயல்முறையை முன்பு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை எடுத்துக்கொண்ட நேரத்திலிருந்து ஐந்து வேலை நாட்களுக்கு விரைவுபடுத்துகின்ற வகையில் Citi நிறுவனம் eFPI @ Citi இன் அறிமுகத்தை இன்று அறிவித்துள்ளது.


இந்த சந்தைக்கு முதல் தீர்வின் அறிமுகமானது, உலகளாவிய முதலீட்டாளர்களிடையே இந்தியா தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில் வெளிவந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவை ஒரு மூலோபாய ஒதுக்கீடாக அதிகளவில் மதிப்பிடுகையில், சந்தையில் நுழைவதற்கான நடைமுறைகளின் எளிமை மிக முக்கியமானதாக இருக்கிறது.


இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பங்குகள் மற்றும் முதலீட்டு (FPI) சொத்துகளில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மேற்பார்வை வைத்திருக்கும் Citi நிறுவனத்தின் சேவைகள் வணிகம், இந்தியாவில் உலகளாவிய முதலீட்டாளர்களின் இந்த தேவையை பெரிய அளவில் மற்றும் அதிக பொருத்தத்துடன் நிவர்த்தி செய்ய சிறந்த நிலையில் உள்ளது.


 


இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) தலைவர் துஹின் காந்தா பாண்டே கூறியதாவது: "இந்தியாவில்


 


வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கு (FPIs) 5 நாட்களில் விரைவான பதிவு காலக்கெடுவை வழங்க Citi மேற்கொண்ட முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்திய மூலதன சந்தைகளை விரைவாக அணுகுவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் SEBI-யின் முக்கிய நோக்கத்துடன் இது ஒத்துப்போகிறது."


சிட்டி நிறுவனம் வங்கி சேவை பங்குதாரராக இருக்கும் குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்வில், Citi நிறுவனம் eFPI @ Citi-ஐ அறிமுகப்படுத்தியது. Citi நிறுவனத்தின் ஆசியா தெற்குப் பிராந்தியத்தின் சர்வீசஸ் தலைவர் மிருலா ஐயர் கூறுகையில், “எந்தவொரு சந்தையின் ஈர்ப்பும், முதலீட்டாளர்கள் எவ்வளவு எளிதாக அதில் உள் நுழைய முடியும் என்பதைப் பொறுத்தே அமைகிறது. இந்தியா நீண்ட காலமாகவே தனது அபரிமிதமான வாய்ப்புகளுக்காக அறியப்பட்டு வருகிறது, மேலும் இந்த முயற்சி, இச்சாத்தியக்கூறை நனவாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இருக்கிறது. "Citi-யின் eFPI என்பது புதுமை, எளிமைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர்-மைய அணுகுமுறை ஆகியவற்றின் மீதான எங்கள் தொடர்ச்சியான கவனத்தின் விளைவாகும்."என்றார்.


eFPI @ Citi தொடக்க விழாவில் நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விஜய் சந்தோக் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், "வெளிநாட்டு பங்கு முதலீட்டாளர்களுக்கு (FPIs), டிஜிட்டல் கருவிகள் மற்றும் திறன்மிக்க செயல்முறைகளைப் பயன்படுத்தும் eFPI @ Citi முன்னெடுப்பானது, வெளிநாட்டு முதலீட்டாளர்களை (FPIs) இணைக்கும் நடைமுறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. இந்த முன்னெடுப்பு, பணிகளை முடிப்பதற்கான கால அளவை வெகுவாகக் குறைப்பதோடு, புதிய FPI வாடிக்கையாளர்களுக்கு எவ்விதச் சிக்கலுமற்ற, சுமூகமான இணைப்பு அனுபவத்தையும் வழங்கும். மேலும், NSDL மற்றும் Citi இடையேயான ஒத்துழைப்பு, எங்கள் அமைப்புகளுக்கு இடையே தடையற்ற, முழுமையான டிஜிட்டல் இணைப்பை உருவாக்குவதற்கு API ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தும் . டீமேட் கணக்குகளைத் திறப்பதை ஏற்கனவே


 


எளிமையாக்கியுள்ள எங்கள் தற்போதைய API-களின் வெற்றியின் அடிப்படையில் புதிய API-கள் கட்டமைக்கப்படும்."என்று கூறினார்.


முதல் கட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளதுடன், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒழுங்குமுறைக்கு உட்பட்ட பரஸ்பர நிதிகள் மற்றும் யூனிட் டிரஸ்டுகள் அடங்கிய பொது நிதிகளை உள்ளடக்கியதுடன் இச்சேவை கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இரண்டாம் கட்டமானது சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற கூடுதல் அதிகார வரம்புகளை உள்ளடக்கும்.


 

Comments

Popular posts from this blog

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

ஜெயலலிதா ஜோதிடர் ஜமால் கணிப்பு – 2026 தேர்தலில் ஆட்சி மாற்றமா?

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு